வாரா வினை வந்தாலும் / Vaaraa Vinai Vandhalum / Vara Vinai Vanthalum
வாரா வினை வந்தாலும் / Vaaraa Vinai Vandhalum / Vara Vinai Vanthalum
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
1
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்
அஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
2
உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்
உறுதி விட்டயராதே நெறி தவறாதே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
3
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
4
தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
5
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
6
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே