vara

வாரா வினை வந்தாலும் / Vaaraa Vinai Vandhalum / Vara Vinai Vanthalum

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

1
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்
அஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

2
உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்
உறுதி விட்டயராதே நெறி தவறாதே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

3
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

4
தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

5
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

6
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

Don`t copy text!