vaazhkaiye

பூரண வாழ்க்கையே / Poorana Vaalkkaiye / Poorana Vaazhkaiye / Poorana Valkkaiye / Poorana Vazhkaiye

1   
பூரண வாழ்க்கையே
தெய்வாசனம் விட்டு
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது

2   
பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்

3   
அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே

4   
முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்

5   
எங்களை நேசித்தே
எங்களுக்காய் மாண்டீர்
ஆ சர்வ பாவப் பலியே
எங்கள் சகாயர் நீர்

6   
எத்துன்ப நாளுமே
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம் தூய மீட்பரே
எங்கள் அடைக்கலம்

7   
இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்

பூரண வாழ்க்கையே / Poorana Vaalkkaiye / Poorana Vaazhkaiye / Poorana Valkkaiye / Poorana Vazhkaiye

Don`t copy text!