vaa

வா பாவி இளைப்பாற வா / Vaa Paavi Illaippaara Vaa / Vaa Paavi Ilaipaara Vaa

1   
வா பாவி இளைப்பாற வா
என் திவ்விய மார்பிலே
நீ சாய்ந்து சுகி என்பதாய்
நல் மீட்பர் கூறவே
இளைத்துப்போன நீசனாய்
வந்தாறித் தேறினேன்
என் பாரம் நீங்கி இயேசுவால்
சந்தோஷமாயினேன்

2   
வா பாவி தாகந்தீர வா
தாராளமாகவே
நான் ஜீவ தண்ணீர் தருவேன்
என்றார் என் நாதரே
அவ்வாறு ஜீவ ஊற்றிலே
நான் பானம்பண்ணினேன்
என் தாகம் தீர்ந்து பலமும்
பேர் வாழ்வும் அடைந்தேன்

3   
வா பாவி இருள் நீங்க வா
நான் லோக ஜோதியே
உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்
என்றார் என் நேசரே
மெய்ஞான அருணோதயம்
அவ்வாறு நான் கண்டேன்
அஜ்ஜோதியில் சந்தோஷமாய்
நான் என்றும் ஜீவிப்பேன்

Don`t copy text!