என் கர்த்தாவே உம்மில் தான் / En Karththaave Ummil Dhaan / En Karthaave Ummil Dhaan / En Karththave Ummil Dhaan / En Karthave Ummil Dhaan
என் கர்த்தாவே உம்மில் தான் / En Karththaave Ummil Dhaan / En Karthaave Ummil Dhaan / En Karththave Ummil Dhaan / En Karthave Ummil Dhaan
என் கர்த்தாவே உம்மில் தான் / En Karththaave Ummil Dhaan / En Karthaave Ummil Dhaan / En Karththave Ummil Dhaan / En Karthave Ummil Dhaan / En Karththaave Ummil Thaan / En Karthaave Ummil Thaan / En Karththave Ummil Thaan / En Karthave Ummil Thaan
1
என் கர்த்தாவே உம்மில் தான்
முழு நெஞ்சத்தாலே நான்
வாஞ்சை கொண்டு நித்தமும்
லோக வாழ்வை அற்பமும்
குப்பையும் என்றெண்ணுவேன்
உம்மையே சிநேகிப்பேன்
2
லோகத்தாரின் களிப்பு
துக்கங்கொண்ட நெஞ்சுக்கு
சஞ்சலத்தையன்றியே
தேற்றத்தை உண்டாக்காதே
உம்மையே சிநேகிப்பேன்
அதால் பாக்கியம் அடைவேன்
3
தேவரீரில் வாழ்வெல்லாம்
பூர்த்தியாகவே உண்டாம்
உம்மில் வாஞ்சை கொள்வோனாய்
உண்மையான நேசனாய்
சேர்வோனுக்குத் தேவரீர்
அந்த வாழ்வைக் கொடுப்பீர்
4
ஆறுதலும் பூரிப்பும்
ஜீவனும் மகிழ்ச்சியும்
உம்மால் தா என்றைக்கும்
குறைவின்றிக் கிடைக்கும்
நீரே அன்பின் காரணர்
கருணைத் தயாபரர்