thanjame

நீர் எந்தன் தஞ்சமே | Neer Enthan Thanjame / Neer Endhan Thanjame

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

1
இன்றுமென்றும் எந்தன் கன்மலையானீரே
இக்கட்டிலும் எமக்குதவினீர்
இன்றுமென்றும் எந்தன் கன்மலையானீரே
இக்கட்டிலும் எமக்குதவினீர்

இம்மட்டும் இடறாமல் காத்த இரட்சகரே
இராப்பகலாய் உம்மை உயர்த்திடுவோம்
இம்மட்டும் இடறாமல் காத்த இரட்சகரே
இராப்பகலாய் உம்மை உயர்த்திடுவோம்

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

2
வழியதும் சத்தியமும் ஜீவனுமானீரே
வழுவிடா தெனையுமே காத்தனீரே
வழியதும் சத்தியமும் ஜீவனுமானீரே
வழுவிடா தெனையுமே காத்தனீரே

வாக்கு மாறாதவர் நம் கர்த்தர் என்றுரைத்தே
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்
வாக்கு மாறாதவர் நம் கர்த்தர் என்றுரைத்தே
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

3
வந்ததாம் வியாதிகள் யாவையும் போக்கினீர்
வல்ல உம் வார்த்தையால் மாற்றினீரே
வந்ததாம் வியாதிகள் யாவையும் போக்கினீர்
வல்ல உம் வார்த்தையால் மாற்றினீரே

நீர் நல்ல பரிகாரி கர்த்தர் என்றுரைத்தே
நானிலம் மீதெங்கும் உயர்த்திடுவோம்
நீர் நல்ல பரிகாரி கர்த்தர் என்றுரைத்தே
நானிலம் மீதெங்கும் உயர்த்திடுவோம்

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

4
நீசனாம் என்னையும் உம் முன்னில் நிறுத்த
நீசக்குருசதில் ஜீவனீந்தீர்
நீசனாம் என்னையும் உம் முன்னில் நிறுத்த
நீசக்குருசதில் ஜீவனீந்தீர்

பாவநிவாரண பலியான கர்த்தரே
பாரினிலே உம்மை உயர்த்திடுவோம்
பாவநிவாரண பலியான கர்த்தரே
பாரினிலே உம்மை உயர்த்திடுவோம்

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

5
வாரும் என் நேசரே உம்மோடு சேர்ந்திட
வாஞ்சையாய் என் கண்கள் நோக்கிடுதே
வாரும் என் நேசரே உம்மோடு சேர்ந்திட
வாஞ்சையாய் என் கண்கள் நோக்கிடுதே

உந்தனின் வீடதில் களிப்போடு துதித்தே
காலாகாலங்களாய் ஆராதிப்போம்
உந்தனின் வீடதில் களிப்போடு துதித்தே
காலாகாலங்களாய் ஆராதிப்போம்

நீர் எந்தன் தஞ்சமே நீரே என் சொந்தமே
நீர் எந்தன் வாஞ்சையே என் தேவனே

என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்
என்னையும் உம் உள்ளங்கையில் வரைந்தீரே
என்றும் நான் உம்மையே துதித்திடுவேன்

நீர் எந்தன் தஞ்சமே | Neer Enthan Thanjame / Neer Endhan Thanjame

Don`t copy text!