thandha

நீர் தந்த நாளும் ஓய்ந்ததே / Neer Thandha Naalum Oindhadhe / Neer Thantha Naalum Oindhadhe / Neer Thandha Naalum Oyndhadhe / Neer Thantha Naalum Oyndhadhe

1   
நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
கர்த்தாவே ராவும் வந்ததே
பகலில் உம்மைப் போற்றினோம்
துதித்து இளைப்பாறுவோம்

2   
பகலோன் ஜோதி தோன்றவே
உம் சபை ஓய்வில்லாமலே
பூவெங்கும் பகல் ராவிலும்
தூங்காமல் உம்மைப் போற்றிடும்

3   
நாற்றிசையும் பூகோளத்தில்
ஓர் நாளின் அதிகாலையில்
துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
ஓர் நேரம் ஓய்வில்லாததே

4   
கீழ்கோளத்தோர் இளைப்பாற
மேல்கோளத்தோர் எழும்பிட
உம் துதி சதா நேரமும்
பல் கோடி நாவால் எழும்பும்

5   
ஆம் என்றும் ஆண்டவரே நீர்
மாறாமல் ஆட்சி செய்குவீர்
உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்
சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்

நீர் தந்த நாளும் ஓய்ந்ததே / Neer Thandha Naalum Oindhadhe / Neer Thantha Naalum Oindhadhe / Neer Thandha Naalum Oyndhadhe / Neer Thantha Naalum Oyndhadhe

Don`t copy text!