soola

வினை சூழா திந்த / Vinai Soozhaa Dhindha / Vinai Suzha Thintha / Vinai Soola Tintha / Vinai Soola Dhindha

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

கனகாபி ஷேகனே அவனியர்க் கொளிர் பிர
காசனே பவ நாசனே ஸ்வாமி

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

1
சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

2
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே
ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன அடியேனும் பள்ளி கொள்வேனே

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

3
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்
பட்சம் வைத்தாள்வையேல் அதுவே ஆனந்தம்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

4
இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்
உயிரை எடுப்பையேல் உன் முத்தி தாராய்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

Don`t copy text!