வினை சூழா திந்த / Vinai Soozhaa Dhindha / Vinai Suzha Thintha / Vinai Soola Tintha / Vinai Soola Dhindha
வினை சூழா திந்த / Vinai Soozhaa Dhindha / Vinai Suzha Thintha / Vinai Soola Tintha / Vinai Soola Dhindha
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
கனகாபி ஷேகனே அவனியர்க் கொளிர் பிர
காசனே பவ நாசனே ஸ்வாமி
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
1
சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய்
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
2
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே
ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன அடியேனும் பள்ளி கொள்வேனே
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
3
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்
பட்சம் வைத்தாள்வையேல் அதுவே ஆனந்தம்
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
4
இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்
உயிரை எடுப்பையேல் உன் முத்தி தாராய்
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா