siriyadhor

கோடானுகோடி சிறியோர் / Kodaanakodi Siriyadhor / Kodanakodi Siriyadhor

1   
கோடானுகோடி சிறியோர்
மேலோகில் நிற்கிறார்
எப்பாவம் தோஷமின்றியும்
ஓயாமல் பாடுவார்
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

2   
பேரின்ப வீட்டில் சுகமும்
மெய் வாழ்வும் நிறைவாய்
உண்டாக சிறு பாலரும்
சேர்ந்தார் எவ்விதமாய்
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

3   
மா பாவம் போக்கச் சிந்தினார்
மீட்பர் தம் ரத்தத்தை
அப்பாலர் மூழ்கி அடைந்தார்
சுத்தாங்க ஸ்திதியை
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

4   
ஏரோதின் வாளால் மடிந்து
தம் பாலன் மீட்பர்க்காய்
ஆருயிரை நீத்ததாலே
உம் பாதம் சேர்ந்தோர்க்காய்
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

5   
பெத்தலை தூய பாலர்போல்
வியாதி ஆபத்தால்
சுத்த இளமையில் சென்றோர்
எண்ணற்ற பாலரால்
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

6   
இப்பூமியில் நல்மீட்பரின்
பேரன்பை அறிந்தார்
விண் வீட்டில் அவர் அண்டையில்
நின்றாரவரிப்பார்
விண்ணில் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
இயேசுநாதா உமக்கே

Don`t copy text!