சிலுவை மரத்திலே / Siluvai Maraththilae / Siluvai Marathilae
சிலுவை மரத்திலே / Siluvai Maraththilae / Siluvai Marathilae
1
சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்
காயம் காட்டிச் சொல்கின்றார்
மீட்பின் செய்கை ஆயிற்றே
வாழ வாவேன் பாவியே
2
பாவ பலியானதால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்
ரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குன்னை ஒப்புவி
மீட்பின் செய்கை ஆயிற்றே
வாழ வாவேன் பாவியே
3
பான போஜனம் நானே
விருந்துண்டு வாழ்வாயே
பிதாவண்டை சேரலாம்
நேச பிள்ளை ஆகலாம்
மீட்பின் செய்கை ஆயிற்றே
வாழ வாவேன் பாவியே
4
சீக்கிரத்தில் வருவேன்
உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு வா என்னண்டையில்
மீட்பின் செய்கை ஆயிற்றே
வாழ வாவேன் பாவியே