விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே / Visvaasaththodu Saatchi Pagarndhae / Visvaasathodu Saatchi Pagarndhae / Visvaasaththodu Satchi Pagarndhae / Visvaasathodu Satchi Pagarndhae
விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே / Visvaasaththodu Saatchi Pagarndhae / Visvaasathodu Saatchi Pagarndhae / Visvaasaththodu Satchi Pagarndhae / Visvaasathodu Satchi Pagarndhae
1
விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே
கர்த்தாவே உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
2
நீர் அவர் கோட்டை வல் கன்மலையாம்
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்
அல்லேலூயா அல்லேலூயா
3
முன்நாளில் பக்தர் நற்போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே
பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே
அல்லேலூயா அல்லேலூயா
4
இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா அல்லேலூயா
5
போர் நீண்டு மா கடூரமாகவே
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே
நாம் அதைக் கேட்டு தைரியம் கொள்வோமே
அல்லேலூயா அல்லேலூயா
6
செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்
சீர் பரதீசில் பாக்கியம் அமையும்
அல்லேலூயா அல்லேலூயா
7 மேலான பகல் பின் விடியும் பார்
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்
அல்லேலூயா அல்லேலூயா
8
அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா அல்லேலூயா