samaathaana

தெய்வ சமாதான / Deiva Samaadhaana / Deiva Samaathaana / Theiva Samaadhaana / Theiva Samaathaana

1         
தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்

அருள் நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்

2        
கையின் நிழலாலே
என்னை மறைத்தார்
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்

அருள் நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்

3        
சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற்போலே
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே 

அருள் நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்

Don`t copy text!