இதோ மரத்தில் சாக / Idho Maraththil Saaga / Itho Maraththil Saaga / Idho Marathil Saaga / Itho Marathil Saaga
இதோ மரத்தில் சாக / Idho Maraththil Saaga / Itho Maraththil Saaga / Idho Marathil Saaga / Itho Marathil Saaga
1
இதோ மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம் லோகமே
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள் மாந்தர்களே
2
இதோ மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்
3
ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்
நீர் பாவம் செய்திலரே
பொல்லாப்பை அறியீரே
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்
4
ஆ இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதிமூலங்கள்
5
நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே
6
நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே
நான் தப்ப நீர் படுகிறீர்
7
நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்
ஆ சாந்தமான சிந்தை
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்
8
நான் சாவின் வாய்க்குத் தப்ப
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்
நான் நீங்க நீர் முன்னிற்பீர்
நான் வாழ நீர் மரிப்பீர்
அவ்வாறு என்னை நேசித்தீர்
9
கர்த்தாவே நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்
10
ஆ உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்