reshma

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா

இறைவா இறைவா இறைவா இறைவா

1
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும்
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும்

அண்டி வந்தோம் அடைக்கலம் நீ 
ஆதரித்தே அரவணைப்பாய்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ 
ஆதரித்தே அரவணைப்பாய்

இறைவா இறைவா இறைவா இறைவா

2
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்

உலகிருக்கும் நிலை கண்டு  
உனது மனம் இரங்காதோ 
உலகிருக்கும் நிலை கண்டு  
உனது மனம் இரங்காதோ 

இறைவா இறைவா இறைவா இறைவா

3
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா

குணமதிலே மாறாட்டம்
குவலயந்தான் இணைவதெப்போ
குணமதிலே மாறாட்டம்
குவலயந்தான் இணைவதெப்போ

இறைவா இறைவா இறைவா இறைவா

4
அமைதி ஒன்றைத் தேடிவந்தேன்
நீ என்றே உன்னைத் தொடர்ந்தேன்
பாருலகில் என் ஆறுதல் யார்
நீ அன்றேல் என் துணை யார்

இறைவா இறைவா இறைவா இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa | V. Caroline | Gnani

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa | Reshma Abraham

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa | D.John Rabindranath

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa | Kruthika | D.Mervin Suresh

யாரிடம் செல்வோம் இறைவா / Yaaridam Selvom Iraivaa / Yaridam Selvom Iraivaa | Kruthika | D.Mervin Suresh

Don`t copy text!