என் பாவத்தின் நிவர்த்தியை / En Paavaththin Nivarththiyai / En Paavathin Nivarthiyai / En Pavaththin Nivarththiyai / En Pavathin Nivarthiyai
என் பாவத்தின் நிவர்த்தியை / En Paavaththin Nivarththiyai / En Paavathin Nivarthiyai / En Pavaththin Nivarththiyai / En Pavathin Nivarthiyai
1
என் பாவத்தின் நிவர்த்தியை
உண்டாக்க அன்பாய் ஜீவனை
கொடுத்து சிலுவையிலே
மரித்த தெய்வ மைந்தனே
2
அநேக பாவம் செய்தோனாய்
மா ஏழையும் நசலுமாய்
ராப்போஜனத்துக்கு வரும்
அடியேனைத் தள்ளாதேயும்
3
நீர் பாவியின் இரட்சகர்
நீர் யாவையும் உடையவர்
நீர் பரிகாரி நீர் எல்லாம்
குணம் வரும் உம்மாலேயாம்
4
ஆகையினால் என் இயேசுவே
குணம் அளியும் என்னிலே
அசுத்தமான யாவையும்
நிவர்த்தியாக்கியருளும்
5
இருண்ட நெஞ்சில் ஒளியும்
மெய்யான விசுவாசமும்
தந்து என் மாம்ச இச்சையே
அடங்கப்பண்ணும் கர்த்தரே
6
நான் உம்மில் வானத்தப்பமே
மகா வணக்கத்துடனே
புசித்தும்மை எக்காலமும்
நினைத்துக்கொண்டிருக்கவும்
7
நான் இவ்விருந்தின் நன்மையால்
சுத்தாங்கனாய்ப் பிதாவினால்
மன்னிப்பைக் கிருபையையும்
அடைய அருள் புரியும்
8
என் இயேசுவே நான் பண்ணின
நல் நிர்ணயம் பலப்பட
பிசாசை ஓட்டியருளும்
தெய்வாவி என்னை ஆளவும்
9
உமக்கே என்னை யாவிலும்
நீர் ஏற்றோனாக்கியருளும்
தினமும் எனக்கும்மிலே
சுகம் அளியும் கர்த்தரே
10
நான் சாகும்போதென் ஆவியை
மோட்சானந்தத்தில் உம்மண்டை
சேர்த்தென்னை உம்மால் என்றைக்கும்
திருப்தியாக்கியருளும்
