paava

நாங்கள் பாவப் பாரத்தால் / Naangal Paava Bhaaraththaal / Naangal Paava Bhaarathaal

1   
நாங்கள் பாவப் பாரத்தால்
கஸ்தியுற்றுச் சோருங்கால்
தாழ்மையாக உம்மையே
நோக்கி கண்ணீருடனே
ஊக்கத்தோடு வாஞ்சையாய்
கெஞ்சும்போது தயவாய்
சிந்தை வைத்து இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே

2   
மோட்சத்தை நீர் விட்டதும்
மாந்தனாய்ப் பிறந்ததும்
ஏழையாய் வளர்ந்ததும்
உற்ற பசி தாகமும்
சாத்தான் வன்மை வென்றதும்
லோகம் மீட்ட நேசமும்
சிந்தை வைத்து இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே

3   
லாசருவின் கல்லறை
அண்டை பட்ட துக்கத்தை
சீயோன் அழிவுக்காய் நீர்
விட்ட சஞ்சலக் கண்ணீர்
யூதாஸ் துரோகி எனவும்
துக்கத்தோடுரைத்ததும்
சிந்தை வைத்து இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே

4   
காவில் பட்ட கஸ்தியும்
ரத்த சோரி வேர்வையும்
முள்ளின் கிரீடம் நிந்தனை
ஆணி ஈட்டி வேதனை
மெய்யில் ஐந்து காயமும்
சாவின் நோவும் வாதையும்
சிந்தை வைத்து இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே

5   
பிரேத சேமம் கல்லறை
காத்த காவல் முத்திரை
சாவை வென்ற சத்துவம்
பரமேறும் அற்புதம்
நம்பினோர்க்கு ரட்சிப்பை
ஈயும் அன்பின் வல்லமை
சிந்தை வைத்து இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே

நாங்கள் பாவப் பாரத்தால் / Naangal Paava Bhaaraththaal / Naangal Paava Bhaarathaal

Don`t copy text!