nirppandhamaana

நிர்ப்பந்தமான பாவியாய் / Nirppandhamaana Paaviyaai / Nirppandhamana Paviyai / Nirppanthamaana Paaviyaai / Nirppanthamana Paviyai

1   
நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன் கர்த்தரே
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

2   
ஆ என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

3   
என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்
பிதாவே என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

4   
என் நெஞ்சின் திகில் தணித்து
என் மேல் இரங்கி ரட்சியும்
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

Don`t copy text!