nengilae

உன் நெஞ்சிலே உண்டான / Un Nengilae Undaana / Un Nenjilae Undana / Un Nenjile Undana

1
உன் நெஞ்சிலே உண்டான
விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கு ஒப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழி உண்டாக்குவார்

2
ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது
வேண்டாம் ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு

3
ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின்னது எங்களுக்கு
வேண்டும் என்றறிவீர்
நீர் எதை நல்லதாக
கண்டீரோ அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர்

4
பல வழி வகையும்
உம்மாலே ஏற்படும்
நீர் செய்வது இசையும்
நீர் சொன்னது வரும்
நீர் வாக்குத்தத்தமாக
மொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்

5
இக்கட்டுகளினாலே
கலங்கினோனே நீ
திடன்கொள் கர்த்தராலே
இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும்
சற்றே பொறுத்திரு
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது

6
உன் கவலைகளுக்கு
இன்றே விடைகொடு
இனி விசாரத்துக்கு
இடம் கொடாதிரு
நீ ஆளும் தெய்வமிலல
நீ பூச்சி என்றறி
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி

7
நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார்
நீ நன்மைகாகப் பட்ட
சலிப்பை நீக்குவார்

8
அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசீர்வதிக்கப்பட்ட
தெய்வீக தேற்றலும்
அடைந்து இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவை பாடுவாய்

9
கர்த்தாவே எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேறிட்டுக்கொண்டிரும்
ஆ எங்களைத் தேற்றிடும்
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்
அப்போ பிழைக்கிறோம்

உன் நெஞ்சிலே உண்டான / Un Nengilae Undaana / Un Nenjilae Undana / Un Nenjile Undana | D. G. S. Dhinakaran

Don`t copy text!