இயேசுவே நீர்தாமே / Yesuve Neerthaame / Yesuve Neerthame
இயேசுவே நீர்தாமே / Yesuve Neerthaame / Yesuve Neerthame
1
இயேசுவே நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே
நீர் என் பூரிப்பு
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
உம்மை நோக்குது
கர்த்தரே உலகிலே
உம்மை யன்றி வாழ்விராது
இன்பமும் காணாது
2
நல் மறைவின் கீழே
நான் ஒதுங்க நீரே
என் அரண்மனை
சாத்தான் வர்மிக்கட்டும்
எதிரி சீறட்டும்
இயேசு என் துணை
திகிலும் பயங்களும்
பாவ நரகக்கெடியும்
இயேசுவால் தணியும்
3
வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்
லோகமே விரோதி
நான் சங்கீதம் ஓதி
தோத்திரிக்கிறேன்
தெய்வக்கை என் சலுகை
இனிச் சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்
4
பொக்கிஷங்கள் யாவும்
வீணும் விருதாவும்
இயேசு என் கதி
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வு குமிழிக்கும்
கானற்கும் சரி
அதை ஏன் தொடருவேன்
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு
5
மனமே நீ ஆறு
பூரிப்பாகப் பாடு
இயேசு சேர்ந்தாரே
அத்தால் எந்தப் பாடும்
தித்திப்பாக மாறும்
நான் உலகிலே
நிந்தையும் நிஷ்டூரமும்
உத்தரித்தும் இயேசுதாமே
என் மகிழ்ச்சியாமே