நீரோடையை மான் வாஞ்சித்து / Neerodaiyai Maan Vaanjithu
நீரோடையை மான் வாஞ்சித்து / Neerodaiyai Maan Vaanjithu
1
நீரோடையை மான் வாஞ்சித்துக்
கதறும் வண்ணமாய்
என் ஆண்டவா என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய்
2
தயாள கர்த்தா உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ
உம் மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ
3
என் உள்ளமே விசாரம் ஏன்
நம்பிக்கைகொண்டு நீ
சதா உன் ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்திரி
4
நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன் ஆவிக்கும்
ஆதிமுதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்
நீரோடையை மான் வாஞ்சித்து / Neerodaiyai Maan Vaanjithu
