maravaadha

ஒருபோதும் மறவாத உண்மை பிதாவிருக்க / Orupodhum Maravaadha Unmai Pidhavirukka / Oru Pothum Maravatha Unmai Pidhavirukka

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும்

1
கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

2
கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

3
உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவர் கண் உன்னைவிட டொழியுமா
இந்நில மீதிலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? உருக்கமில்லாதே போமா

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

4
உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
இலகும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
என்றும் மாறாத நண்பன் இரட்சகருடன் சேர்ந்து

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

Don`t copy text!