mangalamurthy

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே / Pongivarum Arul Manidharai Matridudhe / Pongi Varum Arul Manitharai Mattriduthe

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே

1
தீயவர் திருடரும் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் ஓடியே வா

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே

2
தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே

3
கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் ஓடியே வா

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே / Pongivarum Arul Manidharai Matridudhe / Pongi Varum Arul Manitharai Mattriduthe | A. Arul Jothi, Damaris Roslind | S. G. Mangalamurthy | N. Emil Jebasingh

Don`t copy text!