தெய்வாவி மனவாசராய் / Deivaavi Manavaasaraai / Deivaavi Manavasaraai
தெய்வாவி மனவாசராய் / Deivaavi Manavaasaraai / Deivaavi Manavasaraai
1
தெய்வாவி மனவாசராய்
வந்தனல் மூட்டுவீர்
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்
2
நீர் சோதிபோல் பிரகாசித்து
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்
3
நீர் வான அக்னிபோலவே
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்
பொல்லாத செய்கையும்
4
நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்
5
புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்
தெய்வாவி மனவாசராய் / Deivaavi Manavaasaraai / Deivaavi Manavasaraai