பாவி கேள் உன் ஆண்டவர் / Paavi Kel Un Aandavar / Pavi Kel Un Aandavar
பாவி கேள் உன் ஆண்டவர் / Paavi Kel Un Aandavar / Pavi Kel Un Aandavar
1
பாவி கேள் உன் ஆண்டவர்
அறையுண்ட ரட்சகர்
கேட்கிறார் என் மகனே
அன்புண்டோ என் பேரிலே
2
நீக்கினேன் உன் குற்றத்தை
கட்டினேன் உன் காயத்தை
தேடிப்பார்த்து ரக்ஷித்தேன்
ஒளி வீசப்பண்ணினேன்
3
தாயின் மிக்க பாசமும்
ஆபத்தாலே குன்றினும்
குன்றமாட்டாதென்றுமே
ஒப்பில்லா என் நேசமே
4
எனதன்பின் பெருக்கும்
ஆழம் நீளம் உயரமும்
சொல்லிமுடியாது பார்
என்னைப் போன்ற நேசனார்
5
திவ்விய ரூபம் தரிப்பாய்
என்னோடரசாளுவாய்
ஆதலால் சொல் மகனே
என்புண்டோ என் பேரிலே
6
இயேசுவே என் பக்தியும்
அன்பும் சொற்பமாயினும்
உம்மையே நான் பற்றினேன்
அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்
பாவி கேள் உன் ஆண்டவர் / Paavi Kel Un Aandavar / Pavi Kel Un Aandavar
பாவி கேள் உன் ஆண்டவர் / Paavi Kel Un Aandavar / Pavi Kel Un Aandavar