ஆ நீதியுள்ள கர்த்தரே / Aa Needhiyulla Karththare / Aa Neethiyulla Karththare / Aa Needhiyulla Karthare / Aa Neethiyulla Karthare
ஆ நீதியுள்ள கர்த்தரே / Aa Needhiyulla Karththare / Aa Neethiyulla Karththare / Aa Needhiyulla Karthare / Aa Neethiyulla Karthare
1
ஆ நீதியுள்ள கர்த்தரே
வயல் வறண்டதாலே
எச்ஜீவனும் வதங்கிற்றே
இக்கேடு எங்களாலே
நடந்த பாவத்தின் பலன்
என்றெங்களில் ஒவ்வொருத்தன்
துக்கித்துச் செல்வானாக
2
ஆ எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்
நீரே அடியார் நம்பிக்கை
சகாயத்தை அளியும்
கர்த்தாவே சுத்த தயவால்
மழையைத் தந்து அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்
3
தயாபரா நீர் உமது
நல் வாக்கு நிறைவேற
காய்ந்து கிடக்கும் பூமிக்குத்
தண்ணீர் இறைப்பீராக
வானுலகாளும் கர்த்தரே
மழையை உம்மை அன்றியே
ஆர் பெய்யப் பண்ணக்கூடும்
4
மூச்சற்ற விக்ரகங்களால்
கூடாது தேவரீரே
வானத்தைத் திருக் கரத்தால்
விரித்தீர் அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்
நீரே பிதா நீர் ரட்சகர்
உம்மாலே யாவும் ஆகும்