கர்த்தாவே பரஞ்சோதியால் / Karththaave Paranjodhiyaal / Karththaave Paranjothiyaal / Karthaave Paranjodhiyaal / Karthaave Paranjothiyaal
கர்த்தாவே பரஞ்சோதியால் / Karththaave Paranjodhiyaal / Karththaave Paranjothiyaal / Karthaave Paranjodhiyaal / Karthaave Paranjothiyaal
கர்த்தாவே பரஞ்சோதியால் / Karththaave Paranjodhiyaal / Karththaave Paranjothiyaal / Karthaave Paranjodhiyaal / Karthaave Paranjothiyaal / Karththave Paranjodhiyal / Karththave Paranjothiyal / Karthave Paranjodhiyal / Karthave Paranjothiyal
1
கர்த்தாவே பரஞ்சோதியால்
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்
சீர் அருள் என்னும் பனியால்
உம் அன்பாய்வோரை உய்விப்பீர்
2
உம் மந்தை சுத்தமாகவும்
விளக்கெல்லாம் இலங்கவும்
போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம் அருளும்
3
விண் ஆள் தாம் முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்
விஸ்வாசம் நம்பிக்கை அன்பே
பிரசங்கிப்போர்க்கு ஈந்திடும்
4
எவ்வேழையான பேர்களும்
மேலான ராஜியம் சேரவே
கேட்போர்க்குக் கற்க விருப்பம்
சற்குணம் சாந்தம் நல்குமே
5
நிர்ப்பந்த ஆயுள் முழுவதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
உம் மேய்ப்பர் மந்தை இரண்டையும்
ஆசீர்வதித்துக் காருமே
6
இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்
இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்