karthare

உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே / Um Rajyam Varungaalai Karththare / Um Rajyam Varungaalai Karthare / Um Rajyam Varunkaalai Karththare / Um Rajyam Varunkaalai Karthare

1   
உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்

2   
அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே
தம் பெலனற்ற கையை நீட்டினார்
முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே

3   
ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு ‘இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்

4   
கர்த்தாவே நானும் சாகும் நேரத்தில்
‘என்னை நினையும்’ என்று ஜெபித்தே
உம் சிலுவையை தியானம் செய்கையில்
உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே

5   
ஆனால் என் பாவம் நினையாதேயும்
உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்
உம் திரு சாவால் பாவமன்னிப்பும்
ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்

6   
’என்னை நினையும்’ ஆனால் உமக்கும்
என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ
சிலுவை நோவு ரத்த வேர்வையும்
சகித்த நீர் இவை மறப்பீரோ

7   
’என்னை நினையும்’ நான் மரிக்கும் நாள்
‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றே
நற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்
என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே

உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே / Um Rajyam Varungaalai Karththare / Um Rajyam Varungaalai Karthare / Um Rajyam Varunkaalai Karththare / Um Rajyam Varunkaalai Karthare

Don`t copy text!