நெஞ்சே நீ கலங்காதே / Nenje Nee Kalangaadhe / Nenje Nee Kalangadhey / Nenje Nee Kalangathe
நெஞ்சே நீ கலங்காதே / Nenje Nee Kalangaadhe / Nenje Nee Kalangadhey / Nenje Nee Kalangathe
நெஞ்சே நீ கலங்காதே  சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே
1
பட்டயம் பஞ்சம் வந்தாலும்  அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா வறுமைப் பட்டாலும்
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்
நெஞ்சே நீ கலங்காதே  சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
2
சின்னத்தனம் எண்ணினாலும்  நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்
வந்தணாப்பினாலும்
நெஞ்சே நீ கலங்காதே  சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
3
கள்ளன் என்று பிடித்தாலும்  விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும்
நெஞ்சே நீ கலங்காதே  சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
