kaalaiyil

காலையில் தேவனைத் தேடு / Kaalaiyil Devanai Thedu / Kalame Devanai Thedu / Kaalameay Devanai Thedu

காலையில் தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு
சீரான நித்திய ஜீவனை நாடு

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

1
மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

2
பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

3
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

4
வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே

காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

Don`t copy text!