என்னை நேசிக்கின்றாயா / Ennai Nesikindraayaa / Ennai Nesikindraya
என்னை நேசிக்கின்றாயா / Ennai Nesikindraayaa / Ennai Nesikindraya
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
1
பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
2
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
3
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய்
என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
என்னை நேசிக்கின்றாயா / Ennai Nesikindraayaa / Ennai Nesikindraya | Jollee Abraham | D. Augustin
என்னை நேசிக்கின்றாயா / Ennai Nesikindraayaa / Ennai Nesikindraya | Alice Josephine