issac

என் ஆத்துமாவே கலங்கிடாதே | En Aathumaave Kalangidaathe / En Aathumaave Kalangidhaadhe

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்
வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

1
பஞ்சம் பசியோ நிர்வாணமோ
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்
பஞ்சம் பசியோ நிர்வாணமோ
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்

கொஞ்சமோ அஞ்சாதே
தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார்
கொஞ்சமோ அஞ்சாதே
தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

2
உற்றார் உறவினர் மற்றும் பலர்
குற்றமே கூறித் திரிந்திடினும்
உற்றார் உறவினர் மற்றும் பலர்
குற்றமே கூறித் திரிந்திடினும்

கொற்றவன் இயேசுன்னை
பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார்
கொற்றவன் இயேசுன்னை
பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

3
வாழ்க்கைப் படகினில் அலை மோதி
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்
வாழ்க்கைப் படகினில் அலை மோதி
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்

சூழ்ந்திடும் புயல் நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்
சூழ்ந்திடும் புயல் நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

4
மரணமோ வந்தாலும் மருளாதே
சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்
மரணமோ வந்தாலும் மருளாதே
சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்

அரனவர் ஆபத்தில்
திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே
அரனவர் ஆபத்தில்
திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

5
துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்
அன்பர் சென்ற பாதை அதுவேதான்
துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்
அன்பர் சென்ற பாதை அதுவேதான்

துன்பமே உன் பங்கு
துன்பம் மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய்
துன்பமே உன் பங்கு
துன்பம் மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

6
நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்
நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்

வஞ்சகன் எய்திடும்
நஞ்சம் கணைகளைத் தகர்த்திடுவார்
வஞ்சகன் எய்திடும்
நஞ்சம் கணைகளைத் தகர்த்திடுவார்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்
வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே

என் ஆத்துமாவே கலங்கிடாதே | En Aathumaave Kalangidaathe / En Aathumaave Kalangidhaadhe | J. Issac | J. Joshua

Don`t copy text!