இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா / Iyatkayil Uraindhidum Innaiyatra Iraivaa / Iyarkayil Urainthidum Innaiyatra Iraiva
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா / Iyatkayil Uraindhidum Innaiyatra Iraivaa / Iyarkayil Urainthidum Innaiyatra Iraiva
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு
நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா
1
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாக வா
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாக வா
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு
நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா
2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ
குயிலாகினேன் குரலாக வா
மயிலாகினேன் நடமாட வா
குயிலாகினேன் குரலாக வா
மயிலாகினேன் நடமாட வா
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு
நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா