இன்று கண்ட எகிப்தியனை / Inru Kanda Egipthiyanai / Indru Kanda Egiptiyanai
இன்று கண்ட எகிப்தியனை / Inru Kanda Egipthiyanai / Indru Kanda Egiptiyanai
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
1
கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
2
தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார்
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
3
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
4
சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை