gideon

உடைந்து நொறுங்கும்போது | Udainthu Norungum Pothu / Udaindhu Norungum Bodhu

உடைந்து நொறுங்கும்போது
மடியில் சாய்த்து தேற்றுபவரே
சோர்ந்து தளரும்பொழுதில்
தாங்கிப்பிடித்து நிறுத்துபவரே

உறவுகள் மறந்த போதிலும்
நீர் என்னை நினைக்கின்றீர்
கலங்கின நேரங்களிலெல்லாம்
உம் கரம் கொடுக்கின்றீர்

நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்
நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்

உடைந்து நொறுங்கும்போது
மடியில் சாய்த்து தேற்றுபவரே
நான் சோர்ந்து தளரும்பொழுதில்
தாங்கிப்பிடித்து நிறுத்துபவரே

1
மனிதர்கள் மாறிப்போகலாம் நீரோ மாறாதவர்
மனிதர்கள் மாறிப்போகலாம் நீரோ மாறாதவர்

பாவி நானென்று அறிந்துமே விலகி போகாதவர்
பரனே உம்மையல்லால் துணை எனக்கு யாருண்டு
அரணே நீர்தானைய்யா இனி எதுவும் அணுகாதே
என்னை மறவா என் தேவா

நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்
நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்

உடைந்து நொறுங்கும்போது
மடியில் சாய்த்து தேற்றுபவரே
நான் சோர்ந்து தளரும்பொழுதில்
தாங்கிப்பிடித்து நிறுத்துபவரே

2
களிமண் நானென்று நினைக்கையில்
குயவன் நீர் வந்தீரே
களிமண் நானென்று நினைக்கையில்
குயவன் நீர் வந்தீரே

ஆகாத கல்லாய் தவிக்கையில் தலைக்கல்லாய் வைத்தீரே
அரசே உம் அன்புக்கு ஈடாய் எதுவும் இங்கில்லையே
நீரே எந்தன் பெலன் நான் வெட்கப்பட்டு போவதில்லை
என்னை மறவா என் தேவா

நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்
நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்

உடைந்து நொறுங்கும்போது
மடியில் சாய்த்து தேற்றுபவரே
நான் சோர்ந்து தளரும்பொழுதில்
தாங்கிப்பிடித்து நிறுத்துபவரே

உறவுகள் மறந்த போதிலும்
நீர் என்னை நினைக்கின்றீர்
கலங்கின நேரங்களிலெல்லாம்
உம் கரம் கொடுக்கின்றீர்

நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்
நீரே எந்தன் தகப்பன் உமது கிருபை எனக்குபோதும்

உடைந்து நொறுங்கும்போது | Udainthu Norungum Pothu / Udaindhu Norungum Bodhu | Nirmal | Vicky Gideon | Nirmal

Don`t copy text!