ethanai

ஸ்வாமியே நான் எத்தனை / Swaamiye Naan Eththanai / Swaamiye Naan Ethanai

1           
ஸ்வாமியே நான் எத்தனை
பாவ பாதகங்களை
செய்து வந்தேன் என்று நீர்
நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்

2   
ஐயோ பாவ தோஷத்தால்
கெட்டுப்போனேன் ஆதலால்
நித்தம் வாடி நோகிறேன்
துக்கத்தால் திகைக்கிறேன்

3   
நெஞ்சு என்னைக் குத்தவும்
துன்பம் துயர் மிஞ்சவும்
ஆவியும் கலங்கிற்றே
கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே

4   
வெட்கம் கொண்ட அடியேன்
துக்கமுள்ளோனாய் வந்தேன்
ஸ்வாமி என்னைச் சாலவும்
தேற்றி மன்னித்தருளும்

Don`t copy text!