edith

குருசினில் தொங்கியே / Kurusinil Thongiye

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1
சிரசினில் முண்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

2
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

3
சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

4
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

5
எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

குருசினில் தொங்கியே / Kurusinil Thongiye

குருசினில் தொங்கியே / Kurusinil Thongiye | S.S. Yesadiyan | Edith, Music | Richard Singh

Don`t copy text!