devadasan

இயேசுவின் சிந்தையை தரிப்போம் / Yesuvin Sinthayai Tharippom / Yesuvin Sindhayai Tharippom

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம் 
இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம் 

1
சுத்த இதயத்தை சுதந்தரமக்கி 
சுத்த இதயத்தை சுதந்தரமக்கி 
நித்திய வாழ்வதை நினைவதில் ஆக்கி
சத்திய வேதம் சர்வாயுதமாக்கி 
கர்த்தரை பார்த்து நடப்போம் 

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம் 

2
கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக
கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக
நஷ்டம் என்றே உணராதவராக
கண மகிமை உண்டு பன்னுதற்காக
மன மடிவின்ரி நடப்போம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்

3
பொறுமை இல்லாதவர் முருமுருத்தாலும் 
பொறுமை இல்லாதவர் முருமுருத்தாலும் 
உரிமை இல்லை என்று வெருத்துவிட்டலும்
சிலுவையின் பாடுகள் சகித்தவர் போல
சினம் அடையாது நடப்போம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்

4
கள்ள சகோதரர் கலக்கிடும் போது
கள்ள சகோதரர் கலக்கிடும் போது
சொல்லாதவைகளை சுமத்திடும் போது
அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது
சொல் தவறாமல் நடப்போம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்

5
பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து
பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து
நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து
சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து
பிதாவை போல் ஆக கடவோம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்

6
மூல உபதேசங்களை கடந்து
உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந்தருத்து
நலமென காண்பதை நாடோறும் உணர்ந்து
பூரனரக கடவோம்

இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம்
இயேசுவின் சிந்தையை தரிப்போம் 
நேசமொடவரின் அன்பில் சுகிப்போம் 

இயேசுவின் சிந்தையை தரிப்போம் / Yesuvin Sinthayai Tharippom / Yesuvin Sindhayai Tharippom | J. Devadasan / Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!