deiva

என்னைத் தெய்வ சாயலான / Ennai Deiva Saayalaana / Ennai Deiva Saayalana / Ennai Theiva Saayalaana / Ennai Theiva Saayalana

1    
என்னைத் தெய்வ சாயலான
சிஷ்டியாக்கிப் பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே நீர் நேசந்தான்
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

2    
என்னை முன்னமே தெரிந்து
காலம் நிறைவேறின
போதென் ரூபையே அணிந்து
நர ஜென்மமாகிய
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

3    
எனக்காகப் பாடுபட்டு
நிந்தையுள்ளதாகிய
சாவால் பரமண்டலத்து
பாக்கியத்தைத் தேடின
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

4    
எனக்கொளியும் வழியும்
சத்தியமும் நித்திய
ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

5    
என் துர்ச்சிந்தையை அறுத்து
என்னை வென்று என்னுட
உள்ளத்தை யெல்லாம் இழுத்து
பரவசமாக்கின
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

6    
என்றும் என்னை உண்மையாக
நேசித்துப் பிதாவுட
பாரிசத்தில் எனக்காக
வேண்டிக் கொண்டிருக்கிற
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

7    
என்னை மண்குழியை விட்டு
எழச்சொல்லி பரம
ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
நேசமே நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்

Don`t copy text!