arulum

பிளவுண்ட மலையே / Pilavunda Malaiyae / Pilavunda Malaiye / Pilavunnda Malaiyae

1
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்

2
எந்தக் கிரியை செய்துமே
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே

3
யாதுமற்ற ஏழை நான்
நாதியற்ற நீசன் தான்
உம் சிலுவை தஞ்சமே
உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன்
தூய்மையாக்கேல் மாளுவேன்

4
நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே

பிளவுண்ட மலையே / Pilavunda Malaiyae / Pilavunda Malaiye / Pilavunnda Malaiyae

பிளவுண்ட மலையே / Pilavunda Malaiyae / Pilavunda Malaiye / Pilavunnda Malaiyae | DGS Dhinakaran

Don`t copy text!