arulum

மங்களம் செழிக்கக் கிருபை அருளும் மங்கள நாதனே / Mangalam Selika Kirubai Arulum Mangala Naadhane / Mangalam Sezhikka Kirubai Aruzhum Mangala Naadhane

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

1
மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

2
மணமகன் ……………………………..
மணமகள் ……………………………..
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

3
சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

Don`t copy text!