anbulla

அன்புள்ள ஸ்வாமி நீர் நிர்ப்பந்தமாக / Anbulla Swaami Neer Nirppandhamaaga / Anbulla Swami Neer Nirppandhamaga / Anbulla Swaami Neer Nirpandhamaaga / Anbulla Swami Neer Nirpandhamaga

1   
அன்புள்ள ஸ்வாமி நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக
நீர் என்ன செய்தீர் தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது

2   
வாரால் அடிப்பட்டு எண்ணமற்றீர்
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்
வதைத்திட்டார்கள்

3   
இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று ஐயோ என் பாவத்தாலே
அதும்மை ஸ்வாமி இத்தனை அடித்து
வதை செய்தது

4   
மா ஆச்சரியம் கர்த்தர் சாக வாரார்
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்

5   
ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்
நான் உம்மைப்பற்றி யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்

6   
இதற்கும் என் சாமர்த்தியம் போதாது
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்

7   
அப்போ நான் உமதன் நிறைந்து
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்

8   
பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை இயேசுவே துதிப்பேன்
இஸ்தோத்திரிப்பேன்

Don`t copy text!