alleluya

அல்லேலூயா ஆ மாந்தரே / Alleluyaa Aa Mandhare / Alleluya Aa Mandhare / Alleluyaa Aa Manthare / Alleluya Aa Manthare

1
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா

2
அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை
அல்லேலூயா அல்லேலூயா

3
அம்மூவர் பார்த்தார் தூதன் தான்
வெண் ஆடை தூதன் சொல்லுவான்
நாதர் கலிலேயா செல்வார்
அல்லேலூயா அல்லேலூயா

4
பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே
என் சமாதானம் தாசரே
அல்லேலூயா அல்லேலூயா

5
உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே
நம்பான் சந்தேகங்கொண்டானே
அல்லேலூயா அல்லேலூயா

6
வா தோமா என் விலாவைப் பார்
இதோ என் கைகள் கால்கள் பார்
நம்பு சந்தேகம் தீர் என்பார்
அல்லேலூயா அல்லேலூயா

7
தோமா சந்தேகம் தீர்ந்தனன்
விலா கை கால்கள் நோக்கினன்
என் நாதா ஸ்வாமி என்றனன்
அல்லேலூயா அல்லேலூயா

8
காணாமல் நம்பின் பாக்கியர்
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்
அல்லேலூயா அல்லேலூயா

9
மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்
பரனைப் போற்றி மகிழ்வோம்
அல்லேலூயா அல்லேலூயா

Don`t copy text!