aazham

உன்னதம் ஆழம் எங்கேயும் / Unnadham Aalam Engeyum / Unnadham Aazham Engeyum / Unnatham Aalam Engeyum / Unnatham Aazham Engeyum

1
உன்னதம் ஆழம் எங்கேயும் 
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை செய்கைகள் 
மிகுந்த அற்புதம்

2
பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ நேச ஞானமே

3
முதல் ஆதாமின் பாவத்தால் 
விழுந்த மாந்தர்தாம் 
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்

4
மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும் 
சிறந்த ஏது தாம் என்றே 
ஈந்தாரே தம்மையும்

5
மானிடனாய் மானிடர்க்காய் 
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும் 
பட்டர் பேரன்பிதே

6
கெத்செமெனேயில் குருசிலும் 
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து 
மரிக்கக் கற்பித்தார்

7
உன்னதம் ஆழம் எங்கேயும் 
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை செய்கைகள் 
மிகுந்த அற்புதம் ஆமேன்

Don`t copy text!