aayiram

ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiramaayiram Paadalgalaal / Aayiram Aayiram Paadalgalaal

ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் நான்
ஆனந்த கீதம் பாடிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்

நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்

1
வானதூதர் சேனையெல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே
வானதூதர் சேனையெல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே

வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்
வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்

நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்

2
இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின்
இரட்சகராய் வருபவரே

இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின்
இரட்சகராய் வருபவரே

செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்

நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்

3
ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்
ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்

தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்

நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் நான்
ஆனந்த கீதம் பாடிடுவேன்

ஆயிரமாயிரம் பாடல்களால்

ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiramaayiram Paadalgalaal / Aayiram Aayiram Paadalgalaal| Joyson Family | Stephen J Renswick | P Joyson

Don`t copy text!