aaviye

தந்தை சுதன் ஆவியே / Thandhai Sudhan Aaviye / Thanthai Sudhan Aaviye

1         
தந்தை சுதன் ஆவியே
ஸ்வாமியாம் திரியேகரே
வானாசனமீதுற்றே
எங்களுக்கு இரங்கும்

2        
எங்களை நீர் மீட்கவும்
ராஜாசனம் விட்டிங்கும்
வந்தீர் ஏழையாகவும்
கேளும் தூய இயேசுவே

3        
பாவிகள் விருந்தரே
பாதந்தழும் பாவிக்கே
நேச வார்த்தை சொன்னீரே
கேளும் தூய இயேசுவே

4        
சீமோன் மறுதலித்தும்
அவன் கண்ணீர் சிந்தவும்
கண்டித்தீர் நீர் நோக்கியும்
கேளும் தூய இயேசுவே

5        
வாதைச் சிலுவை நின்றே
இன்று பரதீஸிலே
சேர்வாய் என்றுரைத்தீரே
கேளும் தூய இயேசுவே

6        
நீசர் நிந்தை சகித்தீர்
பாவிக்காய் நொறுங்குண்டீர்
பாவமின்றித் தீர்ப்புற்றீர்
கேளும் தூய இயேசுவே

7        
ஆண்டீர் சிலுவையினால்
மீட்டீர் சுத்த ரத்தத்தால்
மாண்டீர் கொடும் சாவினால்
கேளும் தூய இயேசுவே

8        
தப்பிப்போனோர் மேய்ப்பரே
நோவில் ஆற்றல் செய்வோரே
ஆழ்ந்து போனோர் ஓலமே
கேளும் தூய இயேசுவே

9        
மாசில்லா உம் தூய்மையும்
எங்கள் பாவம் நீக்கவும்
மனஸ்தாவம் ஈயவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

10      
பாவத்தை அகற்றியே
திவ்விய அருள் பேணியே
உம் சமூகம்  நாடவே
கெஞ்சுகின்றோம் இயேசுவே

11      
நாங்கள் உம்மை நம்பவும்
ஆசாபாசம் நீக்கவும்
பக்தர் சாந்தர் ஆகவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

12      
பாவத்துக்குச் சாகவும்
நீதிக்குப் பிழைக்கவும்
ஜீவ பாதை செல்லவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

13      
எங்கள் போர் முடியவும்
நீள் பிரயாணம் ஓயவும்
நாங்கள் இளைப்பாறவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

1         
தந்தை சுதன் ஆவியே
ஸ்வாமியாம் திரியேகரே
வானாசனமீதுற்றே
எங்களுக்கு இரங்கும்

2        
நிந்தை கஸ்தி தேவரீர்
எங்கள் பொருட்டடைந்தீர்
தாசர் வேண்டுதலை நீர்
கேளும் தூய இயேசுவே

3        
சீஷர் மூவர் தூங்கவே
கெத்செமனே காவிலே
உற்ற வேதனையாலே
கேளும் தூய இயேசுவே

4        
தந்தை சித்தம் ஆகவும்
வந்த பாத்திரம் நீங்கவும்
நீர் ஜெபித்ததாலேயும்
கேளும் தூய இயேசுவே

5        
யூதாஸ் முத்தஞ் செய்யவே
யூதர் உம்மைக் கட்டவே
சிறைப்பட்டதாலுமே
கேளும் தூய இயேசுவே

6        
வாரால் பட்ட காயமும்
போர்த்த சிவப்பங்கியும்
முள்ளின் கிரீடமூலமும்
கேளும் தூய இயேசுவே

7        
ராஜன் உம்மைத் தள்ளியே
கள்ளன் பரபாசையே
கேட்டுக்கொண்டதாலுமே
கேளும் தூய இயேசுவே

8        
சிலுவையில் அறையும்
என்று யூதர் கூவவும்
சாகச் சென்றதாலேயும்
கேளும் தூய இயேசுவே

9        
நீர் சுமந்த குரூசாலே
நீர் குடிக்கும் படிக்கே
தந்த காடியாலுமே
கேளும் தூய இயேசுவே

10      
கால் கரத்தில் ஆணியும்
காட்டும் மேல்விலாசமும்
காரிருள் நிமித்தமும்
கேளும் தூய இயேசுவே

11      
ஆடை சீட்டுப் போட்டதால்
சாவின் வாதை பார்க்குங்கால்
யூதர் செய்த நிந்தையால்
கேளும் தூய இயேசுவே

12      
சொன்ன ஏழு வார்த்தையால்
சோர்ந்து தலை சாய்ந்ததால்
உந்தன் பிரேதச் சேமத்தால்
கேளும் தூய இயேசுவே

13      
சோதனை நெருக்கத்தில்
நாங்கள் தொய்ந்து போகையில்
உந்தன் சாவின் வன்மையில்
காரும் தூய இயேசுவே

14      
உம் சிலுவைப் பொருட்டே
யாவும நஷ்டம் எனவே
நாங்கள் எண்ணும்படிக்கே
காரும் தூய இயேசுவே

15      
நாங்கள் உம்மைப் பற்றியே
சாவின் நோவைக் கடந்தே
உம் சமூகம் சேரவே
காரும் தூய இயேசுவே

Don`t copy text!