aavi

வாரும் தெய்வ ஆவி வாரும் / Vaarum Deiva Aavi Vaarum

1   
வாரும் தெய்வ ஆவி வாரும்
எங்கள் ஆத்துமத்திலே
எங்களுக்குயிரைத் தாரும்
வாரும் சுத்த ஆவியே
உம்முடன் வெளிச்சமும்
சீரும் ஜீவனும் வரும்

2   
எங்கள் நெஞ்சிலே நற்புத்தி
தெய்வ பயமும் வர
அதை நீர் குணப்படுத்தி
தப்பு நினைவாகிய
யாவையும் அதில் நீரே
நீக்கும் தெய்வ ஆவியே

3   
மோட்சத்தின் வழியைக் காட்டி
சகல தடையையும்
நீக்கி எங்களைக் காப்பாற்றி
நல்லோராக்கியருளும்
கால் இடறிற்றேயாகில்
துக்கம் தாரும் மனதில்

4   
நாங்கள் தெய்வ மைந்தரென்று
நீரே தீங்கு நாளிலும்
சாட்சி தந்ததிரைவென்று
நெஞ்சைத் தேற்றியருளும்
தெய்வ அன்பின் தண்டிப்பு
எங்களுக்கு நல்லது

5   
எங்களைப் பிதாவிடத்தில்
முழுபக்தியோடேயும்
சேரப்பண்ணி ஆத்துமத்தில்
நீரும் கூப்பிட்டேயிரும்
அப்போ கேட்டது வரும்
நம்பிக்கையும் பெருகும்

6   
மனசெங்களில் கலங்கி
“ஸ்வாமி எந்த மட்டுக்கும்”
என்று கெஞ்சும் போதிரங்கி
அதை ஆற்றிக்கொண்டிரும்
நிற்கவும் தரிக்கவும்
நீர் சகாயராய் இரும்

7   
ஆ நிலைவரத்துக்கான
சத்துவத்தின் ஆவியே
பேயின் சூதுக்கெதிரான
ஆயுதங்களை நீரே
தந்து நாங்கள் நித்தமும்
வெல்லக் கட்டளையிடும்

8   
விசுவாசத்தை அவிக்க
சத்துருக்கள் பார்க்கவே
அதை நீர் அதிகரிக்க
செய்யும் தெய்வ ஆவியே
நாங்கள் பொய்யைப் பார்க்கிலும்
தெய்வ வாக்கை நம்பவும்

9   
சாகும் காலம் வந்தால் நாங்கள்
நித்திய மகிழ்ச்சியாய்
வாழப்போகும் மோட்சவான்கள்
என்றப்போ விசேஷமாய்
நிச்சயத்தை நெஞ்சிலே
தாரும் நல்ல ஆவியே

Don`t copy text!