aaraainthu

ஆராய்ந்து பாரும் கர்த்தரே / Aaraaindhu Paarum Karththaave / Aaraainthu Paarum Karththaave / Aaraindhu Parum Karththave / Aarainthu Parum Karththave

1    
ஆராய்ந்து பாரும் கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்

2    
ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்

3    
ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்

4    
ஆராயும் சிந்தை யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்

5    
ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்

6    
இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்

ஆராய்ந்து பாரும் கர்த்தரே / Aaraaindhu Paarum Karththaave / Aaraainthu Paarum Karththaave / Aaraindhu Parum Karththave / Aarainthu Parum Karththave

Don`t copy text!