aalum

விண் மண்ணை ஆளும் கர்த்தரே / Vin Mannai Aalum Karththare / Vin Mannai Aalum Karthare

1         
விண் மண்ணை ஆளும் கர்த்தரே
எவ்வாறு உம்மை நேசித்தே
துதிப்போம் நன்மையாவுமே
நீர் ஈகிறீர்

2        
உம் அன்பைக் கூறும் மாரியும்
வெய்யோனின் செம்பொன் காந்தியும்
பூ கனி விளை பயிரும்
எல்லாம் ஈந்தீர்

3        
எம் ஜீவன் சுகம் பெலனும்
இல் வாழ்க்கை சமாதானமும்
பூலோக ஆசீர்வாதமும்
எல்லாம் ஈந்தீர்

4        
சீர்கெட்ட மாந்தர் மீள நீர்
உம் ஏக மைந்தனைத் தந்தீர்
மேலும் தயாள தேவரீர்
எல்லாம் ஈந்தீர்

5        
தம் ஜீவன் அன்பு பெலனை
ஏழாம் மா நல் வரங்களை
பொழியும் தூய ஆவியை
அருள்கிறீர்

6        
மன்னிப்பும் மீட்பும் அடைந்தோம்
மேலான நம்பிக்கை பெற்றோம்
பிதாவே பதில் என் செய்வோம்
எல்லாம் ஈந்தீர்

7        
தன்னயம் நஷ்டமாகுமே
உமக்களிக்கும் யாவுமே
குன்றாத செல்வம் கர்த்தரே
எல்லாம் ஈந்தீர்

8        
தர்மத்தைக் கடன் என்பதாய்
பதில் ஈவீர் பன்மடங்காய்
இக்காணிக்கையைத் தயவாய்
ஏற்றுக்கொள்வீர்

9        
உம்மாலே பெற்றோம் யாவையும்
தர்மத்தைச் செய்ய ஆசையும்
உம்மோடு நாங்கள் வாழவும்
அருள் செய்வீர்

Don`t copy text!