நர

அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் / Adhisayangalai Ellaa Idamum Seiyum / Athisayangalai Ellaa Idamum Seiyum / Adhisayangalai Yellaa Idamum Seiyum / Athisayangalai Yellaa Idamum Seiyum / Adhisayangalai Ella Idamum Seiyum / Athisayangalai Ella Idamum Seiyum


அதிசயங்களை
எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள் அவர்
நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கம் செய்தாரே


நர தயாபரர்
முடிய ஆதரித்து
நற்சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து
தயையை நம்முட
மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து தீமையை
எல்லாம் விலக்கவும்


உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்

வேறு வசனம்

1
சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்
மா நன்றி கூறியே
சாஷ்டாங்கம் பண்ணுவோம்

2
தயாபரா என்றும்
எம்மோடிருப்பீராக
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்

3
வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே

Don`t copy text!