அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் / Adhisayangalai Ellaa Idamum Seiyum / Athisayangalai Ellaa Idamum Seiyum / Adhisayangalai Yellaa Idamum Seiyum / Athisayangalai Yellaa Idamum Seiyum / Adhisayangalai Ella Idamum Seiyum / Athisayangalai Ella Idamum Seiyum
அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் / Adhisayangalai Ellaa Idamum Seiyum / Athisayangalai Ellaa Idamum Seiyum / Adhisayangalai Yellaa Idamum Seiyum / Athisayangalai Yellaa Idamum Seiyum / Adhisayangalai Ella Idamum Seiyum / Athisayangalai Ella Idamum Seiyum
1
அதிசயங்களை
எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள் அவர்
நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கம் செய்தாரே
2
நர தயாபரர்
முடிய ஆதரித்து
நற்சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து
தயையை நம்முட
மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து தீமையை
எல்லாம் விலக்கவும்
3
உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்
வேறு வசனம்
1
சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்
மா நன்றி கூறியே
சாஷ்டாங்கம் பண்ணுவோம்
2
தயாபரா என்றும்
எம்மோடிருப்பீராக
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்
3
வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே