உருகாயோ நெஞ்சமே / Urugaayo Nenjame / Urugayo Nenjame
உருகாயோ நெஞ்சமே / Urugaayo Nenjame / Urugayo Nenjame
1
உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்
கரங் கால்கள் ஆணி யேறித்
திருமேனி நையுதே
2
மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்
3
தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே ,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்
4
மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்
5
வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ
உருகாயோ நெஞ்சமே / Urugaayo Nenjame / Urugayo Nenjame | Agnes Davidson
உருகாயோ நெஞ்சமே / Urugaayo Nenjame / Urugayo Nenjame | Jolly Abraham
உருகாயோ நெஞ்சமே / Urugaayo Nenjame / Urugayo Nenjame | Patricia Gladys, Sophia, Jeyaprabha | Felixing Jeremiah
