ஒரு மருந்தரும் குருமருந்து / Oru Marundharum Gurumarundhu / Oru Maruntharum Guru Marunthu
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
1
சிங்கார வனத்தில் செழித்த மருந்து
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
2
மோசே முதல் முன்னோர் காணா மருந்து
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
3
தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து
மனுவாய் உலகினில் வந்த மருந்து
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
4
செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து
ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே
Like this? Leave your thoughts below...